தென்காசியில் பழமையும் பெருமையும் வாய்ந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலான காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.
மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர்.
இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.
முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார்.
அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.
50 ஆயிரம் பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தெப்பக்குளம் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களை தயார் செய்து தருமாறு நகராட்சிக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 7ம் தேதி நடைபெற இருப்பதால் கும்பாபிஷேகத்தை காண வரும் பொதுமக்களின் வசதிக்காகவும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ப தென்காசி நகராட்சிக்குள் அமைந்துள்ள பொருட்காட்சி திடல் (சாந்தி மருத்துவமனை கிழக்குப்பக்கம்), இசக்கி மஹால் மைதானம், பரதன் தியேட்டர் காம்பவுண்ட், மலர் ஐடிஐ (தபால் நிலையம் மேற்குபகுதியில் அமைந்துள்ள இடம்), பொருந்திநின்ற பெருமாள் கோயில் பின்புறம் உள்ள இடம், அப்பல்லோ ஸ்டுடியோ தெற்குப்பக்கம் உள்ள இடம், ராஜ் மெஸ் எதிரே அமைந்திருக்கும் இடம், கிருஷ்ணா ஹோட்டல் மேற்குப்பக்கம் அமைந்துள்ள இடம், செங்கோட்டை ரோடு ராஜா அன் ராஜா சாமில் கிழக்குபக்கம் அமைந்துள்ள இடம், செங்கோட்டை ரோடு ஆரோக்யா ஆயர்வேதா மருத்துவமனை மேற்கு பக்கம் அமைந்துள்ள இடம் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்ப தூய்மை பணியினை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tenkasi Kaasi Viswanathar Temple History, 2025 Tenkasi Kumbhabhishekham, Kaasi Viswanathar Temple Kumbabishekam 2025 Date, Time, Festival Event, Programs, Function, Special Pooja